Friday, May 22, 2015

பொம்மை

'என்னடா சொல்ற. சதீஷ் வரானா? 4 நாள் முன்னாடி கூட பேசிட்டு இருந்தேனே? சொல்லவே இல்ல?'
'.....'
'என்ன சர்பரைஸ்ஒ போ. யுஎஸ்ல இருந்து வர்றது அவனுக்கு வெளையாட்ட போச்சு. சரி, என்ன விஷயமா வர்றான்? வீட்டுக்காவது தெரியுமா இவன் வர்றது?'
'...'
'அங்கேயாவது சொன்னானே. சரி டா. இப்போ மணி 10 ஆச்சு. காலைல எத்தன மணிக்கு பிளைட் லேன்ட் ஆகுது?, என்ன பிளைட்?'
'...'
'சரி. கார் தான. கண்டிப்பா எடுத்துட்டு வர்றேன். அப்போ நா இப்பவே கெளம்பி அங்க ரூமுக்கு வந்தடறேன் தினா. பாண்டிச்சேரில இருந்து SRP வர எப்படியும் மூணு மணி நேரம் ஆகிடும். அப்படியே சும்மா ஒரு ரவுண்டு போயிட்டு,  காலைல நம்ம போய் பிக் அப் பண்ணிக்கலாம். எப்போ கோயம்புத்தூர் போறான்?
'....'
'அப்போ ஓகே. ஒரு நாள் கழிச்சுதான. எனக்கும் கொஞ்சம் வேலையிருக்கு கிண்டில. சரிடா, நா கெளம்பறேன்.'

எங்க கன்வேர்சசனை வைத்தே என்ன நடக்கிறது என்பதை யூகித்திருப்பீர்கள். ஆம். இப்போ பேசிட்டு இருந்தது, என் ப்ரண்ட் தினேஷ். இன்னொரு ப்ரண்ட் சதீஷ். யுஎஸ்ல இருந்து வர்றான். இப்போ பறந்துட்டு இருப்பானு நினைக்கிறேன். அல்மோஸ்ட் ஒரு வருசத்துக்கு பிறகு பக்க போறேன் அவனை. நான், பாண்டிச்சேரில சொந்தமா ஒரு ஹோட்டல் நடத்திட்டு வருகிறேன். புதுசா கார் வாங்கினேன் ஒரு வாரம் முன்னாடி. பாண்டிச்சேரில தா ரேகிச்டேர். போர்ட் பியாஷ்டா. பிக் அப் எப்படி இருக்குனு டெஸ்ட் பண்ணனும்னு நெனச்சிட்டு இருந்தேன். நல்ல ரோடு இங்க இருந்து சென்னை போக வரைக்கும். புல்அஹ டெஸ்ட் பண்ணி பாக்கணும்நு முடிவு பண்ணிட்டேன்.
இன்னிக்கு புதன் கிழமைன்றதால அவ்ளோ ரஷ் இல்ல ரோடுல. சம்மர் டைம், கண்ணாடிய எறக்கி விட்டுட்டு, புல் ஸ்பீட்ல வந்துட்டு இருந்தேன்.
கொஞ்சமும் சிரமம் இல்லாமல், வண்டி 180 kmph ஐ தொட்டிருந்தது. ஒரு விநாடி மூடிய கண் திறக்க இயல வில்லை. தொப் என்ற சப்தம் கேட்க, ஒரு குலுக்கலுடன் வண்டியை நிறுத்தினேன்.
' ச்சே. தூங்கிவிட்டேனா. யாரவது மேல் மோதி விட்டேனா?' என என் நெஞ்சம் வேகமாக துடிக்க ஆரம்பித்தது. மணி 12:05 என டஷ்போர்ட் சிவப்பு எழுத்தில் காட்டியது.  பதட்டத்துடன், காரை ஓரமாக நிறுத்திவிட்டு, காரை விட்டு இறங்கினேன் கையில் டார்ச் உடன்.
 சுற்றிலும் சில்வண்டு சப்தம் கேக்க, எந்தவிதமான அசைவுகளோ, நடமாட்டமோ இல்லை. தூரத்தில் மட்டும் ஒரு சில வீடுகளில் மஞ்சள் தெரு விளக்குகள் எரிந்து கொண்டிருந்தது. எதுவும் நடக்கவில்லை என்று என்னை சமாதானப்படுத்திக்கொண்டு, மீண்டும் வண்டியை கிளப்பினேன்.
கலையில் சதீஷ் ஒரு 5 மணிபோல் ஏர்போர்ட் வாசலில் வரவேற்று, தினேஷ் ரூமிற்கு வண்டியை செலுத்தினேன். இன்றைய பொழுது எப்படி போனதென்றே தெரியாத அளவிற்கு ஊரை சுற்றி, பலகதைகள் பேசி, எவனிங் 9 அளவில், ஒரு ரூமில் ஆஜரானோம். சதீஷ் வாங்கி வந்த சிங்க்ல் மால்ட் விஷ்கிஐ கலி செய்ய ஆரம்பித்தோம்.  இன்று நைட் நான் திரும்பவும் பாண்டிச்சேரி போக வேண்டும், கலையில் இருந்தே ஹோட்டல் புக்கிங், அது, இது என பலவேலைகள் இருக்கிறது. இதை தினேஷிடமும், சதிஷிடமும் முன்கூட்டியே சொல்லியிருந்தேன். சரக்கடிக்க ஆரம்பித்தபின், எப்படி டைம் போனதென்றே தெரியவில்லை. எதேச்சையாக மணியை பார்க்க, மணி 11:45 என கட்டியது. தினேஷிடமும், சதிஷிடமும் சொல்லிவிட்டு கிளம்ப, வெளியில் வந்து சில நேரம் பேசிகொண்டிருந்தோம். பிறகு விடை பெற்று, காரில் ஏறினேன். எதேச்சையாக டஷ்போர்ட்ன் மேல் பார்க்க, ஒரு பொம்மை ஒன்று தொங்கி கொண்டிருந்தது. 'என்ன பொம்மை இது, எப்படி இங்கே வந்தது, என கேட்டேன் போதையில்.


சதீஷ் அதை பார்த்துவிட்டு, 'டேய். அது அழகா, க்யுட் அஹ இருக்கு. விடுடா' என்றான். அவனுக்கு அழகாகவும், க்யுடாகவும் தெரிந்த பொம்மை, எனக்கு அகோரமாய் தெரிந்தது. அதற்க்கு மேலும் அவர்களிடத்தில் விவாதிக்காமல், காரை ஸ்டார்ட் செய்தேன். கைகளை அசைத்தவாறே. OMR ரோடுஐ கடந்து, சோளிங்கநல்லூர் சிக்னலில் ரைட் கட் செய்து, ECR ரோடுஐ பிடித்தேன். சில கார்களும், லாரிகளும் எதிரில் கடந்து சென்றது. ஸ்பீடோ மீட்டர்ஐ பார்த்தேன் 180 அருகே நொண்டி அடித்துகொண்டிருந்தது. மீண்டும் தொப் என்ற சப்தத்தை தொடர்ந்து, கார்  என்ஜின்ஐ உறும வைத்தது, பின் அமைதியாக்கியது. நேரம் 12:05 என காட்டியது. 'ஒருவேளை கார் பயந்து போயிருக்குமோ, என்றவாறு, காரை ஓரமாக விட்டு டார்ச்சுடன் இறங்கினேன். அதே இடம்.
கார் எதாவது ப்ரபலமா இருக்குமோ என யோசித்தவாறு காரை சுற்றி பார்த்தேன். யாரவது நடமாட்டம் இருக்கிறதா என பார்த்தேன். காரில் வேற எதுவும் தெரியாது. ஒருவேளை தெஜவு ஆகா இருக்குமோ, என யோசித்தவாறு மீண்டும் காரில் ஏறினேன் கடவுளை வேண்டியபடி. என்ஜின்ஐ உசுப்ப, அது முரண்டு பிடிக்காமல் ஸ்டார்ட் ஆகியது. ஏதோ மாற்றம் இருப்பது போல தோன்ற, டஷ்போர்ட், கண்ணாடியை உற்று கவனித்தேன். அந்த பொம்மையை காண வில்லை. காரில் விழுந்திருக்கலாம் என கீழே பார்த்தேன். காணவில்லை. காரை விட்டு இறங்கும் பொது விழுந்திருக்கலாம்' என சமாதானபடுத்திகொண்டேன்.
கீழே இறங்கி அதை தேடும் நிலைமையில் நான் இல்லை. காரை நகர்த்தி, பாண்டிச்சேரியை நோக்கி விரட்டினேன். வீட்டை அடைய மணி 2:30 ஆகி இருந்தது. காரை வீட்டின் முன்பு நிறுத்திவிட்டு, வீட்டை திறந்தேன். நேற்றைய நியூஸ் பேப்பர் தட்டுபட அதை எடுத்துக்கொண்டேன். அப்போதுதான் கவனித்தேன் ஹாலில் லைட் எரிந்து கொண்டிருப்பதை. லைட் ஆப் செய்து விட்டுதான் போனதாய் எனக்கு ஞாபகம்.
எனக்கு இருக்கும் ஞாபக மறதியில், அதிகம் யோசிக்கவில்லை. அறை முழுவதும் சில்லென்று இருந்தது. ஒருவேளை சென்னை போகும் அவசரத்தில், ஏசிஐ ஆப் செய்ய மறந்துவிட்டேனோ' என என்னை திட்டியபடி ஏசியை செக் செய்தேன். ஏசி ஆப் ஆகியே இருந்தது. ஏசியை ஆன் செய்தபடி, பெட்டில் விழுந்தேன். கையில் இருந்த பேப்பர்ஐ வீசி விட, அது சிதறியது. அதில் இருந்து ஒரு செய்தி என்னை திக்குமுக்காட செய்தது.

''ECR ரோட்டில் ஹிட்-N-ரன் சம்பவத்தில் கொல்லப்பட்ட பெண். இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை"

இதை படித்ததும், என் உடல் ஒருவித நடுக்கத்திற்கு ஆனது. ஏசி குளிரிலும் வியர்க்க ஆரம்பித்தது. ஏசியை அதிகப்படுதிவிட்டு, பிளங்கட்ஐ போர்த்தி படுத்தேன்.
சிறிது நேரத்தில், என் முதுகு மிகவும் குளிரக உணர, திரும்பி படுத்தேன்.

காரில் இருந்த பொம்மை என்னை பார்த்தவாறு, என்னை ஏதோ கேட்பது போல பெட்டில் கிடந்தது.

<பயணம் முடிந்தது>

3 comments: